``அண்ணாமலைக்கு போலீஸ் புத்திதான் உள்ளது... அரசியல் புத்தி இல்லை!" - அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டம்

ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நேற்றைய தினம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் 75-வது சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு தியாகிகள் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கண்காட்சியை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் புகைப்படங்களை பார்வையிட்டார்.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தியாகிகள் படங்களை பார்வையிட்ட அமைச்சர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ``தமிழக முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார். அவர் திரும்பியவுடன் தமிழக தொழித்துறையில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

அதேபோல, தமிழக போக்குவரத்துத் துறையில் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் கொடுப்பது போல் ஆண்களுக்கும் கொடுக்க முடியாது" என்றார்.

தொடர்ந்து, பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க-வை விமர்சனம் செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``அண்ணாமலைக்கு போலீஸ் புத்தி தான் உள்ளது. அரசியல் புத்தி இல்லை" என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.



from Latest News https://ift.tt/IDc2097

Post a Comment

0 Comments