சபரிமலையில் விமான நிலையம்... கேரள அரசு தீவிரம் - 2,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஆணை!

சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து சில ஆண்டுகளாக கேரள அரசு விவாதித்து வருகிறது. இந்த நிலையில் சபரிமலை விமான நிலையத்துக்காக எருமேலி பகுதியில் 2,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை கேரள அரசு வெளியிடுள்ளது. செறுவள்ளி எஸ்டேட் நிலப்பகுதி போக வெளியே 307 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்காக மணிமலா கிராமத்தில் அதிக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அதே சமயம் செறுவள்ளி எஸ்டேட் தொடர்பான வழக்கு ஒன்று கோர்ட்டில் நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

சபரிமலை

சபரிமலை விமான நிலையத்திற்கான ஓடுதளம் 3 ஆயிரத்து 500 மீட்டர் நீளத்தில் அமைய உள்ளது. சபரிமலை விமானநிலைய திட்டத்துக்காக நாடாளுமன்ற குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. அதே சமயம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது கேரள அரசு. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் விமான நிலைய திட்டத்துக்காக இரண்டு கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கியிருந்தது.

எருமேலியில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் அதிகரிக்கும் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் லூயிஸ் பர்ஜர் கம்பெனியிடம் விமான நிலைய கட்டுமான திட்டமிடல் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபரிமலை விமானநிலையத்துடன் திருவனந்தபுரம், கொச்சி விமான போக்குவரத்தை இணைக்கும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் சபரிமலையில் விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தில் தீவிரம் காட்டிவருகிறது கேரள அரசு.



from Latest News https://ift.tt/G1yFaAY

Post a Comment

0 Comments