`காதலிகள்’ டார்கெட்... `என்னோடு வா’ - நெருங்கி பழகும் காதல் ஜோடிகளை படம் எடுத்து மிரட்டிய நபர் கைது

சேலம், கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடாவிடம் நேரடியாக புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், தனது காதலனுடன் பைக்கில் சென்றதை மர்மநபர் ஒருவர் படம்பிடித்து வைத்துக் கொண்டு தன்னை தனியாக சந்தித்து மிரட்டி பணம் கேட்டதுடன், தன்னை அவருடன் தனிமையில் வர வற்புறுத்தி வருவதாக புகார் அளித்துள்ளார். அதேபோன்று ஓமலூர் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் தன் காதலனுடன் சேர்ந்து இருக்கும் படத்தை காட்டி மர்மநபர் ஒருவர் என்னிடமிருந்து இரண்டு பவுன் நகையை பறித்து சென்றதாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து விசாரிக்க துணை ஆணையர் லாவண்யா மேற்பார்வையில், உதவி கமிஷனர் அசோகன், ஆனந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், இந்த நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் வீராணம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சர்க்கரை வியாபாரி ராஜா என்கிற சரவணன் என்பது தெரியவந்தது.

ராஜா என்கிற சரவணன்

இதையடுத்து அவரை அதிரடியாக போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சர்க்கரை வியாபாரி சரவணன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் பைக்கில் கட்டிப்பிடித்தபடி செல்லும் இளசுகளை நோட்டமிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அப்படி மிகவும் நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடிகளை அவர்களுக்கு தெரியாமலே ரகசியமாக தனது செல்போனின் படம் பிடித்துள்ளார். அதில் சம்பந்தப்பட்ட பெண்களை மட்டும் பின் தொடர்ந்து அவர்களுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி பணம் கேட்டதுடன், இவருடன் தனிமையில் இருக்கவும் வற்புறுத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதன்மூலம் போலீஸார் தனிப்பட்ட விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இந்நபரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். சேலத்தில் காதல் ஜோடிகளை பின்தொடர்ந்து சில்மிக்ஷத்தில் ஈடுப்பட்ட நபரால் பரப்பரப்பு நிலவியுள்ளது.



from Latest News https://ift.tt/J0OpfMC

Post a Comment

0 Comments