மாணவியிடம் பாலியல் அத்துமீறல்... வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் - அண்ணன், தம்பி உட்பட 5 பேர் கைது

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை மெடிக்கல் சென்டர் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி காலை, வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மாணவி, இரவு வெகுநேரமாகியும் திரும்பவில்லை.

கைது

பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மாணவியின் தந்தை புகாரின்படி சூரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து, மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், மறுநாள் (26-ம் தேதி) இரவு 9 மணிக்கு மாணவி வீடு திரும்பினார். மீண்டும் மறுநாள் மாலையில் மாயமான மாணவி, இரவில் வீடு திரும்பினார். இது குறித்து தந்தை விசாரித்தபோது, மளிகை கடையில் வேலை செய்து வரும் வினித் (23), தந்தை அழைத்து வரச் சொன்னதாக கூறி பைக்கில் தேக்கம்பட்டி காட்டிற்கு கூட்டிச்சென்று பாலியல் சீண்டல் செய்தார்.

மறுநாளும் இவ்வாறு அழைத்துச்சென்று வினித் மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள் 3 பேர் என 5 பேர் கும்பலாக பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டனர். இதனை வீடியோ எடுத்து, ``நாங்கள் எப்போதெல்லாம் வரச்சொல்கிறோமோ வரவேண்டும். இல்லையெனில் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவோம்” என மிரட்டியதாக கூறியுள்ளார்.

இதுபற்றி தகவல் தெரிந்து பதறிப்போன மாணவியின் தந்தை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து மாணவியை கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தேக்கம்பட்டியைச் சேர்ந்த வினித்(எ) ஆசாரி, அவரது தம்பி விக்னேஷ்(21), நண்பர்களான ஆகாஷ்(எ) தக்காளி(19), அருண்குமார்(28), விக்னேஷ்(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.



from Latest news https://ift.tt/EJeOAyk

Post a Comment

0 Comments