மதுரை: ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம்; கடன் நெருக்கடி - தூக்க மாத்திரை சாப்பிட்டு இளைஞர் தற்கொலை

மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் ஜெகதீஷ். இவருக்கு மணிமேகலை என்பவருடன் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.

தற்கொலை

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது பலரிடம் கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார்.

அதில் நஷ்டம் ஏற்பட்டதால், பழனியில் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் சொத்துக்களை விற்று கடனை அடைத்துள்ளார். ஆனாலும் முழு கடனை அடைக்க முடியவில்லை.

ஜெகதீஷ்

அதோடு அங்கு கடன் தொல்லை தாங்க முடியாமல் மதுரைக்கு வந்தவர், அவனியாபுரம் பிரசன்னா காலனியில் உள்ள தந்தை ஜெகநாதன் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இங்கு வந்த பிறகும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் ஜெகதீஷ்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று அதிகமான அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதனை அவருடைய உறவினர்கள் பார்த்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் உயிரிழந்தார். இது குறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from Latest news https://ift.tt/IRkydiU

Post a Comment

0 Comments