``இந்த சம்பவம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சதி” - கொதித்த பாஜக
ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, ``இந்த சம்பவம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சதி. இந்த சம்பவம் நடந்தது வேறு மாநிலமாக இருக்கும் போது நேற்று முதல் ஏன் இவ்வளவு பீதியடைந்துள்ளனர்.
சிபிஐ விசாரணைக்கு ஏன் பயப்படுகிறார்கள்? போலீஸார் உதவியுடன் ரெயில்வே அதிகாரிகள் இருவரின் போன்களையும் ஒட்டு கேட்டனர். இரண்டு ரயில்வே அதிகாரிகளின் உரையாடல் இவர்களுக்கு எப்படி தெரிந்தது? உரையாடல் எப்படி கசிந்தது. இதுவும் சிபிஐ விசாரணையில் வரவேண்டும். வரவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன்” என்றார்.
`அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி’
தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி ஆனது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாறக்கூடும். பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது மேலும் வலுபெறவும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
from Latest news https://ift.tt/13AXEdr
0 Comments