Tamil News Live Today : 9 மவடடஙகளல அடதத 3 மண நரததகக மழ... வனல ஆயவ மயம தகவல!

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மழை

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (02-07-2023) முதல் அடுத்த நான்கு நாள்களுக்குப் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும், நாளை (03-07-2023) ஐந்து மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த மூன்று மணி நேரத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



from Latest news https://ift.tt/T0PeHzg

Post a Comment

0 Comments