Rohit Sharma: போரிவாலி மைதானத்தில் மலர்ந்த காதல்; உற்ற உறுதுணை ' - மனைவி குறித்து நெகிழும் ரோஹித்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய மனைவியான ரித்திகா அவருக்கு எந்தளவுக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பது பற்றி நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

ரோஹித்தும் ரித்திகாவும் நீண்ட காலமாக காதலித்தே திருமணம் செய்து கொண்டார்கள். ரித்திகா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் உறவினரும் கூட. ஸ்போர்ட்ஸ் மேனேஜர் பணி செய்து கொண்டிருந்த ரித்திகா ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மாவின் மேனேஜர் ஆனார். நண்பர்களாக பழகிய இருவருக்குமிடையில் காலப்போக்கில் காதல் மலர்ந்தது. மும்பையின் போரிவாலி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ரோஹித் ரித்திகாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த ரித்திகாவுக்கும் இன்ப அதிர்ச்சி.

Ritika, Yuvraj, Rohit
6 வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்த இருவரும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சமைரா என்கிற பெண் குழந்தையும் பிறந்தது.
Rohit, Ritika

ரோஹித் மீது ரித்திகா கொண்டிருக்கும் காதலை பல சமயங்களில் வெளிப்படையாக உணர முடியும். ரோஹித் சதங்களை நெருங்கும் போது உணர்ச்சிப் பெருக்கோடு கண்ணீரோடு கேலரியிலிருந்து கடவுளை வேண்டிக் கொண்டிருப்பார். ரோஹித் சிறப்பாக ஆடும்போது ஆர்ப்பரிப்பில் சிறு குழந்தையைப் போல துள்ளிக் குதிப்பார். இதையெல்லாம் பல போட்டிகளின் போது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களும் கண்டு நெகிழ்ந்திருக்கின்றனர்.

இந்நிலையில்தான் தன்னுடைய மனைவி ரித்திகா குறித்து ரோஹித் சர்மா பேசியிருக்கிறார். 'ரித்திகா ரொம்பவே உறுதுணையானவள். என்னுடைய கனவுலகில் நான் வாழ வேண்டும் என்பதே அவளுடைய விருப்பம்.

Rohit & Ritika
என்னுடைய வாழ்வின் அவளுடைய பங்களிப்பு என்னவென்பதை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

என்னுடைய வாழ்வில் அவளுடைய பங்களிப்பு என்னவென்பதை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களையும் கையாள்வதில் அவள் காட்டும் முதிர்ச்சி எதற்கும் ஈடற்றது.' என ரித்திகா குறித்து ரோஹித் நெகிழ்ந்திருக்கிறார்.

Rohit Family

இருவருக்குமிடையேயான புரிதலையும் நெருக்கத்தையும் கண்டு ரசிகர்கள் 'காதல் வாழ்க!' என இணையத்தில் இதயங்களை அள்ளிவீசிக் கொண்டிருக்கின்றனர்.



from Latest news https://ift.tt/QJdNups

Post a Comment

0 Comments