தற்கொலை செய்துகொண்ட மாடல்: ஐபிஎல் கிரிக்கெட் வீரரை விசாரிக்கும் போலீஸ்... நடந்தது என்ன?!

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் தன்யா சிங் (28). மாடலும், ஆடை வடிவமைப்பாளருமான இவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை காலையில் வழக்கம் போலத் தன்யா சிங்கின் அப்பா பன்வர் சிங் எழுப்பச் சென்றிருக்கிறார். அப்போதுதான் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது.

மாடல் அழகி தன்யா சிங் - அபிஷேக் ஷர்மா

இது தொடர்பாக உடனே காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவரின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அவரது வீட்டில் சோதனையிட்டதில் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மாவுக்கும் தன்யா சிங்குக்கும் நெருக்கமான நட்பு இருந்தது தெரியவந்திருக்கிறது. இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, ``சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மா தற்கொலை செய்துகொண்ட தன்யா சிங்குடன் நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார். ஆனால், சமீபகாலமாகத் தன்யா சிங் அனுப்பியிருக்கும் எந்த மெஸெஜ்க்கும் அவர் பதிலளிக்கவில்லை.

மாடல் அழகி தன்யா சிங் - அபிஷேக் ஷர்மா

தன்யா சிங்கின் செல்போன் தொடர்பு விவரங்களைச் சேகரித்து வருகிறோம். அபிஷேக் ஷர்மாவை நேரடியாக விசாரிக்க நோட்டீஸ் அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துவருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/iqj23QW

Post a Comment

0 Comments