``ஓபிஎஸ் எண்ணம்போல் அவருக்கு பலாப்பழ சின்னம் கிடைத்துள்ளது..!" - செல்லூர் ராஜூ

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து தாராப்பட்டி, துவரிமான் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "நான் தாராபட்டி பகுதியில் முதல் பிரசாரத்தை தொடங்கி 3 முறை மேற்கு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன். அப்படி ராசியான ஊரிலிருந்துதான் தற்போது டாக்டர் சரவணனுக்கு பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். கண்டிப்பாக அவர் வெற்றி பெறுவார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இழிவாக பேசிய அண்ணாமலை செருப்புக்கு சமானம்.  இந்தி படித்தவர்கள் அதிகம் பேர், ஏன் தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வந்துள்ளனர் என்பது அண்னாமலைக்கு தெரிய வேண்டாமா?

டி.டி.வி தினகரனுக்கு மானம், ரோஷம் இருந்தால், ஜெயலலிதாவை கொச்சை படுத்தி பேசிய அண்ணாமலை பின்னாடி ஏன் போறீங்க, உங்களுக்கு மானம் இல்லையா?

செல்லூர் ராஜூ பிரசாரம்

ஓபிஎஸ்ஸுக்கு அவருடைய எண்ணம் போலவே பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அவர் அதிமுகவை அழிக்க நினைத்தார், தற்போது அவர் இருக்கிற இடம் தெரியாமல் போயுள்ளார்.

டீக்கடையில் டீ ஆத்துபவரை முதல்வராக பதவி கொடுத்து அழகு பார்த்தவர் முன்னாள் முதல்வர் அம்மா. இன்று அதிமுகவை அழிக்க பார்க்கிறார். இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எதிராக வேலை பார்பவர்கள் அனைவரும் காணாமல் போவர்கள். அண்ணாமலைக்கு , ராம சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினருக்கு இனிமேல் தான் இருக்கு..!" என பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/FZrTIm9

Post a Comment

0 Comments