சிவகங்கை: ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் விரட்டிச்சென்று இளைஞர் குத்திக் கொலை - பதற வைத்த சம்பவம்

சிவகங்கை அருகேயுள்ள பில்லுரை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 42) இவருக்கு லலிதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். சிவகங்கை காளவாசல் பகுதியில் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு 7 மணி அளவில் வடக்கு ராஜ வீதியில் சிலருடன் ராஜபாண்டி பேசிக் கொண்டிருந்தார்.

கொலை

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரண்டுபேர் கத்தியால் குத்த வந்தபோது அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள பெயின்ட் கடைக்குள் ராஜபாண்டி புகுந்திருக்கிறார். விரட்டி வந்த இரண்டு பேரும் கடைக்குள் கீழே தள்ளி கத்தியால் சரமாரியாக ராஜபாண்டியை குத்தியதில் அதே இடத்தில் சரிந்து இறந்து போனார்.

மக்கள் நடமாட்டமும் கடைகளும் அதிகமுள்ள பகுதியில் நடந்த இக்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகங்கை எஸ்.பி சிபி சாய் சௌந்தர்யன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து  ராஜபாண்டியன் உடலை  உடல்கூராய்வுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜபாண்டி

நேற்று முன் தினம் இரவு சிவகங்கை நேரு பஜாரில் அசரப் அலி என்பவர் கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நேற்று மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ராஜபாண்டி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/wbr0iZC

Post a Comment

0 Comments