விருதுநகர் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - தலைமறைவாக இருந்த 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

அருப்புக்கோட்டை அருகே பெண் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி கோவிலாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன்(42), பேரையூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (23), ராம்குமார்(20), அழகுராஜ்(19), 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவான பிரபாகரன், விஜய் ஆகிய 2 பேரை தேடி வந்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 354b, 366, 376d, 397, 506ii ஆகிய வழக்கு பிரிவின் கீழ் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

இதில் 17 வயது சிறுவன், காப்பகத்திலும் மற்ற நான்கு பேரும் 15 நாள் நீதிமன்றக்காவலில் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அவருடைய தம்பி விஜய் ஆகிய 2 பேரும் விருதுநகர்‌ ஜூடிசியல் மாஜிஸ்திரேட்-2 நீதிபதி நிஷாந்தினி முன்பு சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி நிஷாந்தினி உத்தரவிட்டார்.



from Latest News https://ift.tt/6zFrieJ

Post a Comment

0 Comments