பரிகார பூஜை; 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் - சாமியார், அவரின் மனைவி மீது வழக்கு

கர்நாடக மாநிலம் அவலஹள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்தமூர்த்தி என்ற சாமியாரை சந்தித்திருக்கிறார். அப்போது, அந்த பெண்ணின் குடும்பத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் பெரும் ஆபத்து வர இருக்கிறது. உடனே சில பரிகார பூஜைகள் வீட்டில் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார் சாமியார் ஆனந்தமூர்த்தி. அந்த பகுதி மக்களால் சக்தி வாய்ந்த சாமியார் எனக் கூறப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணும் சம்மதித்து தன் இல்லத்துக்கு அழைத்திருக்கிறார். குறிப்பிட்ட நாளில் சாமியாரும், அவர் மனைவி லதாவும் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பூஜையை தொடங்கியிருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை முயற்சி

அப்போது தீர்த்தம் எனக் கூறி சாமியார் ஆனந்தமூர்த்தி போதைபொருளை கொடுத்து, அந்த பெண்ணிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறார். இதை சாமியாரின் மனைவி லதா வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். மேலும், இந்த செய்தி வெளியே தெரிந்தால், வீடியோவை வெளியிட்டு விடுவோம் எனவும் மிரட்டியிருகின்றனர். அதைத் தொடர்ந்து அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை சாமியார் ஆனந்தமூர்த்தி, அவரின் மனைவி லதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



from Latest News https://ift.tt/427Vsd6

Post a Comment

0 Comments