ம.பி: கூட்டுப் பாலியல் வன்கொடுமை... பேத்தியை காப்பாற்றச் சென்ற பாட்டி - உறவினர்களால் நேர்ந்த கொடூரம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 11-ம் தேதி தன் மாமா வீட்டில் சில நாள்கள் தங்குவதற்காகச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி சிறுமி இருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். சிறுமி தாக்கப்படுவதைப் பார்த்த சிறுமியின் பாட்டி, தடுக்க முயன்றபோது அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் தப்பியோடி விட்டனர்.

சிறுமியின் பாட்டியையும் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால் சம்பவத்தன்று பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமிக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை ஜபல்பூர் காவல்நிலையத்தில் தனது மகளும், தனது தாயும் உறவினர் இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்துவிட்டதாகப் புகார் அளித்திருந்தார்.

காவல்துறை

இந்த நிலையில், ஜபல்பூர் காவல்துறை அதிகாரி பிரதீப் குமார், "குற்றம்சாட்டப்பட்ட இருவர் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. ஆனால், சிறுமியின் பாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாகப் பரிசோதனை செய்ததில் அவரும் உறவினர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதியானது.

குற்றவாளிகள் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்றொருவர் தலைமறைவாகியிருக்கிறார். அவரை தீவிரமாகத் தேடிவருகிறோம். குற்றவாளிகள் இருவர் மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.



from Latest News https://ift.tt/YkSq6uo

Post a Comment

0 Comments