Bamba Bakiya: புள்ளினங்காள், சிம்டாங்காரன், பொன்னி நதியின் ஆரம்ப வரிகள் பாடிய பாடகர் காலமானார்!

திரையிசைக் கலைஞர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் பம்பா பாக்யா. தன் அழுத்தமான குரலால் பல பாடல்களைப் பாடியிருபக்கிறார். 49 வயதாகும் தமிழ் பாடகர் பம்பா பாக்யா ,ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சர்க்கார் திரைப்படத்தில் ‘சிம்டாங்காரன்’, 'எந்திரன் 2.0' படத்தில் 'புள்ளினங்காள்', 'பிகில்' படத்தில் 'காலமே காலமே' போன்ற பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பாடிய ‘ராட்டி’ ஆல்பம் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து வெளியான ‘பொன்னி நதி’ பாடலின் ஆரம்ப வரிகளை பாடியிருந்தார். மேலும், இன்னொரு பாடலையும் இப்படத்தில் பாடியுள்ளார். இதுதவிர சர்வம் தாள மயம், அன்பறிவு, இரவின் நிழல், ஆக்சன், ராட்சசி போன்ற திரைப்படங்களிலும் பல ஆல்பம் பாடல்களிலும் இவரின் கனத்த குரலால் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

பம்பா பாக்யா

சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய இந்த திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



from Latest News https://ift.tt/n8EAq0o

Post a Comment

0 Comments