பாலிவுட்டின் காதல் ஜோடி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானிக்கு பிப்ரவரியில் திருமணம்!

பாலிவுட்டில் காதல் ஜோடிகள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றனர். நடிகர் ரன்பீர் கபூர் தன் காதலியான நடிகை அலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். கத்ரீனா கைஃப் தன் காதலன் விக்கியைத் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொண்டார். அந்த வரிசையில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இணைய இருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிகை கியாரா அத்வானியை காதலிப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இருவரும் அந்த செய்தியை மறுத்தோ அல்லது உறுதி செய்தோ கருத்து வெளியிட்டதில்லை.

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி

தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கத்ரீனா கைஃப்பை பின்பற்றி சித்தார்த் தனது திருமணத்தை ராஜஸ்தானில் நடத்த முடிவு செய்துள்ளார். பிப்ரவரி மாதம் 6ம் தேதி இத்திருமணம் நடக்க இருக்கிறது. இருவருக்கும் திருமண சடங்குகள் பிப்ரவரி 4ம் தேதி தொடங்குகிறது. ராஜஸ்தானின் ஜெய்சாலிமர் பேலஸ் ஹோட்டலில் இத்திருமணம் நடைபெறும். பிப்ரவரி 3ம் தேதியே சித்தார்த் தனது பாதுகாவலர்கள் குழு ஒன்றை இந்த ஹோட்டலுக்கு அனுப்பி பாதுகாப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளார். திருமணத்திற்கான ஆடைகள் குறித்து விவாதிப்பதற்காக இருவரும் கடந்த வாரம் ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் சித்தார்த் மல்ஹோத்ராவின் இல்லத்திற்குச் சென்று வந்தார்.

திருமணத்திற்கு முன்பு காதல் ஜோடிகளாக புத்தாண்டை கொண்டாட சித்தார்த்தும், கியாராவும் நேற்று இரவு புறப்பட்டு சென்றனர். அவர்கள் துபாயில் தங்களது புத்தாண்டை கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து புத்தாண்டை கொண்டாட புறப்பட்டுச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.



from Latest News https://ift.tt/zDCNARy

Post a Comment

0 Comments