சேலம்: முன்விரோதத்தில் கொலை செய்ய வந்த ரெளடி... அடித்துக் கொன்ற தந்தை - மகன்கள்!

சேலம், அரிசிபாளையம் ஒளவையார் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன். பிரபல ரெளடியான இவர் மீது சேலம் மாநகர, மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவரின் நண்பர் பிரபாகரன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு யோகேஸ்வரன் அவரின் நண்பர் பிரபாகரன் ஆகியோர் ரவியை கொலை செய்யும் நோக்கத்தில் அரிசி பாளையம் காதர்பாட்சா தெருவுக்கு சென்றுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது.

க்ரைம்

அங்கு அவர்கள் ரவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ளனர். இதில் ரவி படுகாயம் அடைந்தார். இதனை அறிந்த ரவியின் மகன்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே தனது தந்தை தாக்கப்படுவதை கண்டு பதிலுக்கு இவர்கள் கீழே கிடந்த கற்களை ரெளடி யோகேஸ்வரன் மீதும் அவரின் நண்பர் பிரபாகரன் மீதும் வீசி உள்ளனர்.

இதில் தலையின் பின் பகுதியில் பலத்த காயமடைந்து யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளப்பட்டி காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த புத்தாண்டு அன்று அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பிரபாகரன் மற்றும் அவரின் நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட ரெளடி

இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன் தான் சிறைக்கு செல்ல ரவி தான் காரணம் எனக்கூறி அவரிடம் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே முன்பிரோதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த மோதலில் தான் தற்போது யோகேஸ்வரன் கொல்லப்பட்டிருக்கிறார். போலீஸார் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.



from Latest news https://ift.tt/ILrWKlk

Post a Comment

0 Comments