குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்; உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி - புதுக்கோட்டை சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி  அருகே திருவரங்குளம் நம்புனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் பொற்பனையான்(31). இவரது மனைவி பிரியங்கா(23). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. பொற்பனையானுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால், பொற்பனையான் தினமும் மது அருந்திவிட்டு வருவதாகவும், பிரியங்கா கொண்டு வந்த நகைகளை குடிப்பதற்காகவே விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், கடந்த சில நாள்களாகவே  பிரியங்கா மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இதற்கிடையே வீட்டிற்கு அருகே இருக்கும் சிறு கொட்டகையில் பொற்பனையானும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். முதலில் பிரியங்கா தூக்கில் தொங்கியதாகவும், இதைப்பார்த்து அதிர்ந்த பொற்பனையான் அடுத்த சில நிமிடங்களிலேயே தூக்கில் தொங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருவரும் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆலங்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலங்குடி டி.எஸ்.பி தீபக் ரஜினி உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இறந்த தம்பதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னையால், கணவன், மனைவி இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவரங்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news https://ift.tt/jw8Gsml

Post a Comment

0 Comments