"எங்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்திய ரசிகர்களுக்கு நன்றி"- ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா

புனேவில் நேற்று  நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.

இதில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி இந்திய ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். “எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி

பாகிஸ்தானுடனான எங்களது முந்தைய ஆட்டம் எந்த ஒரு இலக்கையும் எங்களால் துரத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அனைத்து பயிற்சியாளர்களும் கடினமாக உழைத்து தன்னபிக்கையை அளித்து வருகின்றனர். குறிப்பாக எங்களுடைய தலைமைப்  பயிற்சியாளர் ஜொனாதன் எப்போதும் எங்களுக்கு நேர்மறையான கருத்துக்களை வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

ஒரு கேப்டனாக அணியை முன்னின்று  சிறப்பாக வழி நடத்துவதை நான் விரும்புகிறேன். மேலும் சிறந்த வீரரான ரஷித் கான் எப்போதும் எங்களுடைய அணியை உயிர்ப்புடன்  வைத்திருக்கிறார்.

இந்த சமயத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எங்களுக்கு நேரடியாக ஆதரவை அளித்து வரும் இந்திய ரசிகர்களுக்கும் எனது  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.



from Latest news https://ift.tt/pNPKMs4

Post a Comment

0 Comments