திருச்சியில், ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!’ - நேரடிப் பயிற்சி!

நாணயம் விகடன், ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!’ என்கிற நேரடிப் பயிற்சி வகுப்பை திருச்சியில் ஜூன் 15, 2024 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த உள்ளது. இதில், பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் பயிற்சியை அளிக்க உள்ளார்.

ஏ.கே.பிரபாகர், ஐ.டி.பி.ஐ கேப்பிடல் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் சுமார் 30 ஆண்டுக்கால அனுபவம் கொண்டவர். பங்குத் தேர்வில் வல்லவர்.

நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதலிடத்தில் இருப்பது பங்குச் சந்தை ஆகும். நிறுவனப் பங்குகளை போர்ட்ஃபோலியோவாக உருவாக்கும்போதுதான் அது அதிக லாபகரமானதாக இருக்கிறது. அந்தப் பங்கு முதலீட்டுக் கலவையை எப்படி உருவாக்குவது என ஏ.கே.பிரபாகர் விளக்க உள்ளார். முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளிக்கிறார்.

கட்டணம் ரூ.5,000. முன்பதிவுக்கு: https://bit.ly/NVSharePortfolio



from Vikatan Latest news https://ift.tt/Eed58FL

Post a Comment

0 Comments