புதிய முப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழர் - யார் இந்த ராஜா சுப்ரமணி?

இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

புதிய முப்படை தளபதி - என்.எஸ். ராஜா சுப்ரமணி
புதிய முப்படை தளபதி - என்.எஸ். ராஜா சுப்ரமணி

தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

யார் இவர்?

லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த சேவையாற்றியவர். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் (NDA) மற்றும் இந்திய ராணுவ கல்விக்கழகத்தில் (IMA) இளநிலைப் பட்டம் பெற்ற இவர், 1985 டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாகத் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.

கல்வியில் சிறந்து விளங்கிய இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்றதோடு, டெல்லி மற்றும் லண்டனிலும் உயர்கல்வி பயின்றிருக்கிறார்.

புதிய முப்படை தளபதி - என்.எஸ். ராஜா சுப்ரமணி
புதிய முப்படை தளபதி - என்.எஸ். ராஜா சுப்ரமணி

மேலும், டெல்லி தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) முன்னாள் மாணவரான இவர், ராணுவத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைத் திறம்பட வகித்திருக்கிறார்.

மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும், ராணுவத் தலைமைத் துணைத் தளபதியாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகத் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். தனது பணிக்காக பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.



from Vikatan Latest news https://ift.tt/qAY2GDc

Post a Comment

0 Comments