மதுரை மாநகராட்சி: ரூ. 200 கோடி முறைகேடு புகாரில் தீவிர விசாரணை; அதிமுக கவுன்சிலர்கள் DIG-யிடம் மனு

கடந்த வருடம் மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்து வரி வசூல் மென்பொருளில் (UTIS software) ஏற்பட்ட தொழில்நுட்ப இடைவெளியைப் பயன்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் கூட்டு சேர்ந்து ரூ. 200 கோடி வரை முறைகேடு செய்துள்ளதாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் மதுரையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, மாநகராட்சியின் மேயர் இந்திராணி பதவி விலகினார். மேலும் புகார் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் நேற்று ஒன்றிணைந்து மதுரை சரக டிஐஜியிடம் மனு அளித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, ''மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.200 கோடி முறைகேடு குறித்த புகாரை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.  

தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை திருப்திகரமாக இல்லை. 

மதுரை அ.தி.மு.க கவுன்சிலர்கள்
மதுரை அ.தி.மு.க கவுன்சிலர்கள்

இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த நிதியை மீட்டெடுத்து மாநகராட்சிக்குத் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.



from Vikatan Latest news https://ift.tt/M0BIYNS

Post a Comment

0 Comments