மதுரை: இளம் தம்பதி தற்கொலை! - பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம் காரணமா?!

பங்கு சந்தை முதலீட்டில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதால் கணவன்- மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

மதுரை பழைய குயவர்பாளையத்தில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் மனைவி லாவண்யா.

நிதி ஆலோசகரான நாகராஜன், பங்கு சந்தையில் பல லட்ச ரூபாய் முதலீடும் செய்து வந்திருக்கிறார். ஆரம்பத்தில் தொழில் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

அதை ஈடுகட்ட வெளியில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மேலும் தொழில் நஷ்டமானதால் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

நாகராஜன்-லாவண்யா

நேற்று இரவு தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

வீடு நீண்டநேரம் திறக்காமல் இருப்பதை பார்த்து அருகில் வசிப்பவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, தெப்பக்குளம் காவல் நிலைய காவல்துறையினர் வந்து இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜன்-லாவண்யா

இவர்களின் தற்கொலைக்கு பங்கு சந்தை முதலீடு மட்டும் தான் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/xo8MlwV

Post a Comment

0 Comments