https://gumlet.assettype.com/vikatan/2019-05/93a54d4f-5d1c-4c16-bf39-0c0e40dc49a4/108048_thumb.jpgஅரியலூர்: ஆடு மேய்க்கச் சென்ற 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை - போதை ஆசாமி வெறிச்செயல்!

பெரம்பலூர் மாவட்டம், கோவில்பாளையம் மெயின்ரோடு தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் மனைவி உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (80). தர்மலிங்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள். உமா தன் மகன் பழனிசாமியுடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், உமா இறவாங்குடி கிராமத்தில் உள்ள தன் மற்றொரு மகன் தங்கமணி வீட்டிற்குக் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை சித்தரிப்புப் படம்

அங்கு சென்ற உமா, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மேய்ச்சல் இல்லாமல் பட்டினியாக வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை மேய்த்துக் கொண்டு அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்திருக்கிறார்.

அப்போது மதுபோதையில் அங்கு வந்த நபர் ஒருவர், மூதாட்டியிடம் தவறாக நடந்து கொண்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்தச் சம்பவத்தால் மூதாட்டி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். அதையடுத்து, அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்ச சென்றிருக்கிறார். பின்னர், மூதாட்டி மயங்கிக் கிடந்ததைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அரியலூர்

அங்கு மூதாட்டியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது, அவர் நடந்தவற்றை முழுமையாகச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். மூதாட்டி சிகிச்சையிலிருந்தவாறே இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரைத் தேடி வருகிறார்.



from Latest News https://ift.tt/SxLPzC7

Post a Comment

0 Comments