டீ-யில் எலி மருந்து கலந்து தாயை கொன்ற மகள் - 14 சென்ட் நிலத்துக்காக கூகுளில் ஐடியா தேடிய கொடூரம்!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மனைவி ருக்மணி(58). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் இந்துலேகா(36) இவர்களுடன் வசித்து வருகிறார். இந்துலேகாவின் கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இந்துலேகா கணவனுக்கு தெரியாமல் எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருவதாக கூறியதை அடுத்து கடனை உடனடியாக அடைக்க முடிவு செய்தார். ஆனால் கையில் பணம் இல்லாததால் பெற்றோர் பெயரில் உள்ள வீடு மற்றும் 14 சென்ட் நிலத்தை சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி, பின்னர் சொத்தை விற்று கடனை அடைக்க திட்டமிட்டுள்ளார். நிலத்தை இந்துலேகா பெயருக்கு மாற்ற பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து பெற்றோரை தீர்த்துக்கட்டிவிட்டு சொத்தை தனது பெயருக்கு மாற்ற கொடூர திட்டமிட்டார் இந்துலேகா.

தாயை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இந்துலேகா

கடந்த 17-ம் தேதி தாய், தந்தைக்கு டீ-யில் எலியை கொல்லும் மருந்தை கலந்து குடிக்க கொடுத்துள்ளார். தாய் ருக்மிணி டீ-யை குடித்துள்ளார். ஆனால், சுவையில் மாற்றம் தெரிந்ததால் தந்தை சந்திரன் டீ குடிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி ருக்மிணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே குன்னங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாயை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் இந்துலேகா. ஆனாலும் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் கடந்த 23-ம் தேதி ருக்மிணி இறந்தார்.

அதே சமயம் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏறட்டதைத்தொடர்ந்து ருக்மிணி உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவரின் உடலுக்குள் விஷம் சென்றிருப்பது தெரிய்வந்துள்ளது. இதுபற்றி மருத்துவமனையில் இருந்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் இந்துலேகாவின் தந்தையிடம் விசாரணை நடத்தியபோது, மகள் கொடுத்த டீ-யின் சுவையில் மாற்றம் தெரிந்தது பற்றியும், வீட்டில் பூச்சி மருந்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து போலீஸார் இந்துலேகாவை விசாரித்தினர். அதில் 14 சென்ட் நிலத்துக்காக பெற்றோருக்கு டீ-யில் விஷம் கலந்துகொடுத்ததை இந்துலேகா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

இந்துலேகா

இதுபற்றி போலீஸார் கூறுகையில், ``இந்துலேகாவின் செல்போனை சோதனை செய்ததில் 'விஷம் கொடுத்து எப்படி கொலைச்செய்யலாம்' என கூகுளில் தேடியுள்ளதை கண்டுபிடித்துளோம். பெற்றோரை கொல்வதற்காக இரண்டு மாதம் முன்பே 20 டோலோ மாத்திரைகளை வாங்கி வைத்துள்ளார். தாயை கொலைச்செய்ய பயன்படுத்தியதுபோக மீதமுள்ள எலி விஷத்தையும், விஷம் கொடுக்க பயன்படுத்திய பாத்திரத்தையும் கைப்பற்றியுள்ளோம். சிகிச்சையில் இருந்த ருக்மிணி-யிடம் உடலில் விஷம் எதாவது சென்றதா என மருத்துவர்கள் கேட்டிருக்கிறார்கள். இதுபற்றி மகள் இந்துலேகாவிடம் கேட்டுள்ளார் தாய் ருக்மிணி. 'மரணப்படுக்கையில் கிடக்கும்போது இப்படியெல்லாம் பேசாதீங்க' என இந்துலேகா கூறியுள்ளார். தாய் மருத்துவமனையில் இருக்கும்போது தந்தையிடம் ஒரு பொட்டலத்தை கொடுத்து இதை வெளியே வீசிவிடுமாறு கூறியுள்ளார் இந்துலேகா.

அதில் என்ன இருக்கிறது என கேட்டதற்கு எலி விஷம் என சொல்லியிருக்கிறார். இது எங்கிருந்து வந்தது என தந்தை கேட்டதற்கு எலித்தொல்லையால் நான் தான் வாங்கினேன் என சொல்லியிருக்கிறார். இப்போது இந்துலேகாவின் கணவர் ஊருக்கு வந்துள்ளார். இந்துலேகா எதற்காக கடன் வாங்கினார் என்பதுபற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/1iE64NU

Post a Comment

0 Comments