வாழ்த்துங்களேன்! - நாகம்பட்டு ஶ்ரீஆனந்தலட்சுமி நரசிம்மர் கோயில்!

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்த மான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர விவரங்களை இனி உங்களின் மொபைல் போன் மூலமே பதிவு செய்யலாம். அவ்வகையில், இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.

20.2.24 முதல் 4.3.24 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 18.2.24செல்வ போகம் அருளும் நாகம்பட்டு நரசிம்மர்!

20.2.24 முதல் 4.3.24 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, சென்னை-திருவள்ளூர் அருகில் உள்ள நாகம்பட்டு ஆனந்தலட்சுமி நரசிம்மர் கோயிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இங்கு, மகாலட்சுமியை மடியில் அமர்த்தி ஆனந்தத் திருக்கோலத்தில் நரசிம்மர் காட்சி கொடுக்கிறார். பத்மாவதி சமேத நிவாசப்பெருமாளும் இங்கு சந்நிதிகொண்டுள்ளார். ஆக, திருப்பதியையும் சோளிங்கர் ஆலயத்தையும் ஒருங்கே சேவித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த நரசிம்மப் பெருமாளுக்கு 3 நெய் தீபங்கள் ஏற்றி, 9 முறை கோயிலை வலம் வந்து வழிபட்டால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும்; குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும்; கடன் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.

அற்புதமான இந்தத் தலத்தில் வாசகர்கள் நீண்ட ஆயுள், நிறைவான வாழ்வு பெறவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.



from Vikatan Latest news https://ift.tt/HYohkO3

Post a Comment

0 Comments