கோவை மேயர் ரேஸ்: அப்செட்டில் மாவட்ட பொறுப்பாளர்கள்.. முன்னேறும் புதுவரவுகள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள், இன்று உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர். நாளை மறுநாள் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், தற்போதுவரை கோவை மாநகராட்சி மேயர் யார் என்கிற தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

கோவை நா.கார்த்தி மருதமலை சேனாதிபதி

மேயர் பதவிக்கு 10-க்கும் மேற்பட்டோர் முயற்சித்து வருகின்றனர். முக்கியமாக மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்தி தன் மனைவி இளஞ்செல்விக்கும், மருதமலை சேனாதிபதி தன் மகள் நிவேதாவுக்கும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

இவர்களை தவிர 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் மீனாலோகு உள்ளிட்ட ஏராளமானோர் மேயர் பதவிக்கு முயற்சி செய்கிறார்கள். சென்னையில் அறிவலாயம், உதயநிதி அலுவலகம், அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகம் என்று முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி

யாரிடமும் செந்தில் பாலாஜியோ, தலைமையோ பிடி கொடுத்து பேசுவதில்லையாம். இதனால், கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டேயிருக்கிறது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ``சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கு எதிராக மகளிரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வைத்த பகிரங்க குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கான வாய்ப்பு குறைவுதான்.

கோவை திமுக

மருதமலை சேனாதிபதி மகள் நிவேதா வேட்புமனுவிலேயே ஏராளமான சர்ச்சைகள் உள்ளன. உளவுத்துறை ரிப்போர்ட்டும் அவருக்கு எதிராகவே உள்ளது. ரேஸில் உள்ள மூத்த நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

காலம் காலமாக கோவை திமுகவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சாதிய அரசியலும் இந்த ரேஸில் தலைவிரித்தாடுகிறது. அதன்படி, மாநகராட்சி எல்லையில் வரும் 4 மாவட்ட பொறுப்பாளர்களில், மருதமலை சேனாதிபதி, பையாகிருஷ்ணன் மற்றும் சி.ஆர் ராமசந்திரன் ஓர் அணியாக திரண்டுள்ளனர்.

கோவை

இப்போதே அணியாக செயல்படுவதால், மேயர் யார் என்பதை கடைசி நேரத்தில்தான் அறிவிப்பார்கள். முன்னரே அறிவித்தால் அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். யாரும் எதிர்பாராத ஒருவர் மேயராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

அதன்படி19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்பனா மற்றும் 30-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா, 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெய்வயானை ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. இவர்களில் ஒருவர் பெயரை மேயராக அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

கல்பனா
தெய்வயானை
சரண்யா

கோவை மாநரகாட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன. மண்டலங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை மேயர் பதவியேற்ற பிறகு வெளியிடவும் திட்டமிட்டு வருகின்றனர்.” என்றனர்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/xCdgabV

Post a Comment

0 Comments